Friday, December 7, 2018

நிலங்களின் வகைகள் பற்றி

Image may contain: text
நிலங்களின் வகைகள் பற்றி
நஞ்சை நிலம் 
பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர்பெறும் உரிமைப் பெற்று நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய நிலங்களுக்கு தான் நஞ்சை நிலம் என்று பெயர். தமிழ்நாட்டில் மட்டும் 16 லட்சத்து 57 ஆயிரத்து 676 ஹெக்டேர் உள்ளது. ( 1 ஹெக்டேர் என்பது 2 ஏக்கர் 47 செண்ட்)
புஞ்சை நிலம்
பாசன வசதி இல்லாத சோளம், கம்பு, ராகி போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய மேடான நிலங்களுக்கு புஞ்சை நிலம் என்று பெயர். இந்த நிலங்கள் மழை மற்றும் கிணற்றுப் பாசன வசதிகளை நம்பிக் கூட இருக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் 67 லட்சத்து 80 ஆயிரத்து 80 ஹெக்டேர் உள்ளது. ( 1 ஹெக்டேர் என்பது 10,000 சதுர மீட்டர்)
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஆற்று தண்ணீரை நம்பி இருப்பது நஞ்சை. மழையை மட்டுமே நம்பி இருப்பது புஞ்சை.
மானாவரி
மழைநீரை மட்டுமே நம்பி நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக்கூடிய நிலங்களுக்கு மானாவரி என்று பெயர்.
இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்களில் சாகுபடி செய்ய தகுதி வாய்ந்த நிலங்களை "தீர்வை ஏற்பட்ட தரிசு" என்றும், சாகுபடியே செய்ய முடியாத கல்லாங்குத்து, பாறைகள் போன்று இருக்கும் பகுதிகளை "தீர்வை ஏற்படாத தரிசு" என்றும் சொல்கிறார்கள்.
அதேபோல புறம்போக்கு என்றால் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலங்கள் தான். ஆனால் பொது உபயோகத்திற்கு பயன்படுத்தி கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் பொது விஷயங்களுக்காக தந்து விடலாம் என்ற நிலையில் இருக்கும் நிலங்களைத் தான் "புறம்போக்கு" என்கிறார்கள்.

No comments:

Post a Comment