Wednesday, December 5, 2018

இந்து வாரிசுரிமை சட்டம் , 1925

Image may contain: text
மற்ற ஊர்களைப் போல சென்னை, மும்பை, கல்கத்தா நகரங்களில் வசிப்பவர்கள் உயில் எழுத இயலாது. இவர்களுக்கு உயிலில் சில விதிவிலக்குகள் உண்டு. அதாவது வாரிசுகளுக்கு சமபங்காக பிரிக்காமல் தன்னுடைய விருப்பப்படி ஒருவர் உயில் எழுதியிருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் தான் உயிலை செல்லுபடியாக்க முடியும். அதேபோல் யாருக்கு உயில் எழுதி வைக்கப்படுகிறதோ அவர்கள் சாட்சிக் கையெழுத்து போடக்கூடாது. அப்படி போட்டால் அந்த உயில் செல்லுபடியாகாது.
உயில் பற்றி இந்து வாரிசுரிமை சட்டம் , 1925 கூறுகிறது.உயிலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வெள்ளைத்தாளில் கூட எழுதலாம். இரண்டு சாட்சிகளை வைத்துக் கொண்டு எழுதி பாக்கெட்டில் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் உயிலை பதிவு செய்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும். தீர்க்க ஆலோசனை செய்த பின்னர் 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதலாம். கண்டிப்பாக முத்திரைத்தாளில் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயிலை ஒருவர் தன் கைப்பட எழுதலாம். வழக்கறிஞர்கள் மூலமாக எழுதலாம். பத்திர எழுத்தர்கள் மூலமாகவும் எழுதலாம்.
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். ஆனாலும் அந்தந்த ஏரியாவுக்கு உட்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வது தான் நல்லது.
உயிலை எப்ப வேணும்னாலும் ரத்து செய்து கொள்ளலாம். ரத்து செய்து விட்டு மறுபடியும் புதிதாக உயில் எழுதலாம். இறக்கும் வரை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால் முந்தைய உயிலை ரத்து செய்து விட்டுதான் அடுத்த உயிலை எழுத வேண்டும்.
உயிலுக்கு சாட்சிகள் தான் முக்கியம். பதிவு செய்த உயிலாக இருந்தாலும் சாட்சிகள் வேண்டும். உயில் எழுதுபவர் ஒவ்வொரு பக்கத்திலும் அல்லது இறுதியான இடத்திலும் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்து இல்லை என்றால் உயில் செல்லாது. குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து பெற வேண்டும். சாட்சிகள் கையெழுத்து இல்லை என்றால் உயில் செல்லாது. சாட்சிகளின் தகப்பனார் / கணவர் பெயர், முகவரி ஆகியவற்றையும் கட்டாயம் பெற வேண்டும்.
உயிலை எழுதும் போது வருகிற சாட்சிகளே அதனை ரத்து செய்யும் போதும் வர வேண்டும் என்று அவசியம் இல்லை. புது சாட்சிகள் கையெழுத்து வாங்கி உயிலை ரத்து செய்யலாம்.
உயிலை எழுதி வைப்பவர் பிறரிடம் சொல்லாத வரை அவர் எழுதியுள்ள உயிலின் விவரம் யாருக்கும் தெரியாது. அப்படி தெரியாத போது தானாக வாரிசுகளுக்கு சொத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். அதனால் உயில் எழுதி வைப்பவர் நம்பிக்கையான நபர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். இளம் வயதுடைய ஆட்களை சாட்சிகளாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரிடமாவது உயில் பற்றிய விவரத்தை சொல்லி வைக்க வேண்டும். அவரிடம் உயிலின் நகலை கொடுத்து வைக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் நம்பிக்கையை பொறுத்தது.
உயில் எழுதி வைத்தவர் அதனை பதிவு செய்யும் முன் இறந்து விட்டால், அதனை உயிலின் படி நிறைவேற்றுபவராக அல்லது வேறு வகையாகவோ உரிமை உடையவர் அதனை எந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் அல்லது சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவுக்காக தாக்கல் செய்யலாம் என பதிவுச் சட்டத்தின் விதி 69 மற்றும் பிரிவு 40 கூறுகிறது. 
பதிவு செய்யாமல் இறந்து விட்டார் என்ற காரணத்திற்கான மனுவை கொடுக்க வேண்டும். மனு கொடுப்பவரின் வாக்குமூலத்தை சார் பதிவாளர் பெற்று பின்னர் விதி 69 ன்படி விசாரணை செய்வார்.

No comments:

Post a Comment