Saturday, December 1, 2018

புகார்-விசாரணை

Image may contain: text
பொதுவாக புலன் விசாரணையில் தலையிடும் அதிகாரம் குற்றவியல் நடுவருக்கு இல்லை. அதேபோல் உயர்நீதிமன்றமும் தேவையில்லாமல் புலன் விசாரணையில் தலையிடுவது இல்லை. ஆனால் காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில் பொதுமக்களை துன்புறுத்துவதாக நிறைய வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது.
புலன் விசாரணை அதிகாரிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அத்தியாயம் 12 ல் கூறப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றி தான் விசாரணை நடத்த வேண்டும். துன்புறுத்தல் என்பதற்கு விரிவான அர்த்தமுள்ளது. காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்துவதை ஏற்க முடியாது.
அதனால் காவல்துறையினர் புலன் விசாரணை நடத்தும் போது கீழ்கண்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1. புகாரில் குறிப்பிட்டுள்ள எந்தவொரு நபரையும் விசாரணைக்கு அழைக்கும் போது அல்லது அந்த சம்பவம் குறித்து எந்தவொரு சாட்சி யையும் விசாரணைக்கு அழைக்கும் போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160 ன் கீழ் எழுத்து மூலமான அழைப்பாணையில் அந்த விசாரணை / புலன் விசாரணைக்கு அவர்கள் முன்பு எந்தத் தேதியில், எந்த நேரத்தில் முன்னிலையாக வேண்டும் என்று குறிப்பிட்டு, அந்த அழைப்பாணையை அனுப்ப வேண்டும்.
2. அந்த விசாரணையை காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பொது நாட்குறிப்பு / காவல் நிலைய நாட்குறிப்பு / தின நாட்குறிப்பு போன்றவற்றில் பதிவு செய்ய வேண்டும்.
3. விசாரணை / புலன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நபரை காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது.
4. முதற்கட்ட விசாரணை அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதற்காக உச்சநீதிமன்றம் " லலிதாகுமாரி Vs உத்திர பிரதேச அரசு மற்றும் பலர் (2012-2-SCC-1)" என்ற வழக்கில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேற்கண்ட நெறிமுறைகளை காவல்துறையினர் பின்பற்ற தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO - 22365/2017 DT - 14.10.2017
M. அருண்வேல்குமார் Vs காவல் கண்காணிப்பாளர், சேலம் மற்றும் பலர்
2017-2-TLNJ-CRL-454

No comments:

Post a Comment