Thursday, January 10, 2019

பெண்ணுக்கு திருமணத்தின்போது அளித்த சீதனப் பொருட்கள்

Image may contain: text
பெண்ணுக்கு திருமணத்தின்போது அளித்த சீதனப் பொருட்கள் பற்றி...
ஒரு பெண்ணின் சீதனப் பொருட்களை வைத்திருக்கும் கணவரோ அல்லது அப்பெண்ணின் மாமனார் வீட்டாரோ அவற்றை ஒரு டிரஸ்டி (காப்பாளர்) என்ற முறையில் வைத்திருந்து, அப்பெண் கேட்கும்போது திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க தவறினாலோ அல்லது தனது சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டாலோ இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 405 ன்படி 'Breach of Trust'என்ற தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும்அபராதம் விதிக்கப்படும். 
கணவன், மனைவி பிரிந்து விட்ட நிலையில் என்ன நடக்கும்? 
உச்சநீதிமன்ற நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா அவர்கள் கையாண்ட வழக்கு 
இந்த வழக்கில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் (கணவரை பிரிந்து வாழ்பவர்) தன்னுடைய கணவன் வசம் உள்ள சீதனப் பொருட்களை திருப்பி பெற்றுத்தருமாறு கோரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நடுவர், அந்த பெண் நீதிமன்ற உத்தரவுப்படி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதால், அவரை Domestic Violence Act என்னும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவராக கருத முடியாது என்று கூறி அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். 
குற்றவியல் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து திரிபுரா உயர்நீதிமன்றத்தில் அந்த பெண் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி குற்றவியல் நடுவரின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார். 
எனவே அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் பிரிந்து வாழ்வது என்பது திருமணத்தை முறித்தது ஆகாது. அந்த பெண் ஏற்கனவே துயரங்களை அனுபவித்துள்ளார். தற்போதும் தொடர்ந்து துன்பப்பட்டு வருகிறார். எனவே குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி அவர் பாதிக்கப்பட்டவர் தான் என்று கூறி பெண்ணின் சீதனப் பொருட்களை கணவர் உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

No comments:

Post a Comment