ஜாதிச் சான்றிதழ் பெறும் வழிகள்
ஐயப்பன் என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பள்ளி ஆவணங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளி காலத்தில் அவருக்கு அவசியம் ஏற்படாத காரணத்தினால் ஜாதிச் சான்றிதழ் பெறவில்லை. இந்நிலையில் ஐயப்பனுக்கு அரசு நலத்திட்டங்களை பெறவும், கடன் மற்றும் தேர்தல் காரணங்களுக்காகவும் ஜாதிச் சான்றிதழ் தேவைப்பட்டது. எனவே அவர் 14.6.2016 ஆம் தேதி ஜாதிச் சான்றிதழ் வழங்கும்படி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவுடன் தனது சகோதரன், சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களின் ஜாதிச் சான்றிதழ்களையும், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சகோதரருடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றையும் இணைத்திருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் அந்த மனுவை விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டு தாசில்தாருக்கு அனுப்பி வைத்தார்.
தாசில்தார் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் ஐயப்பனின் மனு மீது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் அசால்டாக இருந்து வந்தார். அதனால் ஐயப்பன் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பினார். ஆனாலும் எவ்வித பயனும் இல்லாததால் ஐயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதிகள்....
உச்சநீதிமன்றம் " பீகார் மாநில அரசு மற்றும் பலர் Vs சுமித் ஆனந்த் (2015-12-SCC-248)" என்ற வழக்கில், ஒரு குடும்ப உறுப்பினர்கள் தகுதியான ஜாதிச் சான்றிதழை வைத்திருந்தால், அந்த குடும்பத்தை சார்ந்த மற்றொரு உறுப்பினருக்கும் அதுபோன்று ஜாதிச் சான்றிதழை அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இந்த வழக்கின் மனுதாரரான ஐயப்பனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அரசால் தாழ்த்தப்பட்டவர் என்று ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் ஐயப்பனுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே கோட்டாட்சியர் காலதாமதம் செய்துள்ளார்.
எனவே ஆறு வாரங்களுக்குள் ஐயப்பனுக்கு கோட்டாட்சியர் ஜாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
W. P. NO - 15403/2018
DT - 25.6.2018
ஐயப்பன் Vs வருவாய் கோட்டாட்சியர், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம்
2018-3-TLNJ-CIVIL-52
தாசில்தார் விசாரணை நடத்தி ஒரு அறிக்கையை கோட்டாட்சியருக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் ஐயப்பனின் மனு மீது எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் அசால்டாக இருந்து வந்தார். அதனால் ஐயப்பன் ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பினார். ஆனாலும் எவ்வித பயனும் இல்லாததால் ஐயப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதிகள்....
உச்சநீதிமன்றம் " பீகார் மாநில அரசு மற்றும் பலர் Vs சுமித் ஆனந்த் (2015-12-SCC-248)" என்ற வழக்கில், ஒரு குடும்ப உறுப்பினர்கள் தகுதியான ஜாதிச் சான்றிதழை வைத்திருந்தால், அந்த குடும்பத்தை சார்ந்த மற்றொரு உறுப்பினருக்கும் அதுபோன்று ஜாதிச் சான்றிதழை அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இந்த வழக்கின் மனுதாரரான ஐயப்பனின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அரசால் தாழ்த்தப்பட்டவர் என்று ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் ஐயப்பனுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே கோட்டாட்சியர் காலதாமதம் செய்துள்ளார்.
எனவே ஆறு வாரங்களுக்குள் ஐயப்பனுக்கு கோட்டாட்சியர் ஜாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
W. P. NO - 15403/2018
DT - 25.6.2018
ஐயப்பன் Vs வருவாய் கோட்டாட்சியர், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம்
2018-3-TLNJ-CIVIL-52
No comments:
Post a Comment