Saturday, February 15, 2020

எதிரிடை அனுபவம்

No photo description available.
ஒரு அசையா சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் அந்த சொத்தை உரிமையாளர் உட்பட எவருடைய குறுக்கீடும் இல்லாமல், ஊரறிய தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுபவித்து வந்தால் அந்த சொத்து அவ்வாறு அனுபவித்து வருபவருக்கே சொந்தம் என்ற கருத்தின் அடிப்படையில்தான் எதிரிடை அனுபோகம் உள்ளது.
அவ்வாறு சொத்துக்கு உரிமையே இல்லாத ஒருவருக்கு அந்த உரிமை கிடைப்பது அந்த சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு எதிராக இருப்பதால்தான், இது எதிரிடை அனுபவம் என்று அழைக்கப்படுகிறது.
எதிரிடை அனுபவம் மூலமாக சொத்துக்கு உரிமையில்லாத ஒருவர், அதன் உரிமையை பெறுவது என்பது பல்வேறு நாடுகளிலும் உள்ளது. எத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக அனுபவித்து வர வேண்டும் என்ற காலவரையறை நாட்டுக்கு நாடு வேறுபடும். நம் நாட்டை பொறுத்தவரை அது 12 ஆண்டுகள் ஆகும்.
எதிரிடை அனுபவம் குறித்து காலவரையறை சட்டம் 1963 ல் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரிவுகள் 64 மற்றும் 65 ன்படி, சர்ச்சைக்குரிய அசையா சொத்தின் அனுபவத்திற்கு வழக்கு தொடர நிர்ணயிக்கப்பட்ட காலம் 12 ஆண்டுகள் ஆகும். அதாவது பாதிக்கப்பட்ட நபர் 12 ஆண்டுகளுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழக்கு தொடர....
1. எதிரிடை அனுபவம் கோருபவர் அந்த சொத்தின் உரிமையாளர் அல்லது வேறு எவருடைய குறுக்கீடும் இல்லாமல் சொத்தை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
2. அவ்வாறு அனுபவித்து வருபவர் சொத்தை எல்லோரும் அறியும் வகையில் வெளிப்படையாக அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
3. இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
4. சொத்தின் உண்மையான உரிமையாளரின் உரிமையை மறுத்து, தான்தான் சொத்தின் உரிமையாளர் என்று கூறும் வகையில் சொத்தை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.
இதனால் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு சொத்தின் உரிமையாளர், தெரிந்தோ, தெரியாமலோ தனது சொத்தை வேறு ஒருவர் அனுபவிக்க வழி வகுத்துவிட்டு, 12 ஆண்டுகள் வரை அதனை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால்தான், அவ்வாறு உரிமை இல்லாத ஒருவர் எதிரிடை அனுபவ உரிமை கோர முடியும். 12 ஆண்டுகள் சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவரை அனுபவிக்க விட்டுவிட்டால் உரிமையாளருக்கு சொத்து கிடையாது.
ஆனால் உச்சநீதிமன்றம் இந்த எதிரிடை அனுபோகம் உரிமை என்பது ஆங்கிலேய நாட்டு சட்டம். எதிரிடை அனுபோகம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு எதிரானது. அதனால் எதிரிடை அனுபோகம் என்ற உரிமையை அடியோடு நீக்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. மேற்கண்ட தகவல்தான் எங்களுடைய சொத்து பிரச்சினையும் ஐயா

    எங்களுக்கு சொந்தமான காலி மனையில் ஒருவர் கார் பழுது பார்க்கும் கடையை காம்பவுண்ட் போட்டு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார்.அந்த நபரை காலி செய்து கொடு என்று கேட்டால் முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறுகிறார்
    என் சொத்தை மீட்க நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு வழி காட்டுங்கள் ஐயா
    செல்.9843197090 / 8778505669

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்
      மேற்கண்ட தகவல்களுக்கு வழி காட்டுங்கள் ஐயா

      Delete